PHOTOS: ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை! மீறியோருக்கு அன்டிஜென் பரிசோதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை! மீறியோருக்கு அன்டிஜென் பரிசோதனை!


மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கல்முனையில் இன்று (02) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கே.எம் அப்துல் ரஸாக் (ஜவாத்) ஏற்பாட்டில் கல்முனை மாநகர முன்றலில் இடம்பெறவிருந்த குறித்த போராட்டத்தில் பல பாகங்களிலும் இருந்து மக்கள் பங்கேற்ற போதிலும் தடை உத்தரவினால் அங்கிருந்து மாவடிப்பள்ளி பகுதிக்கு திடிரென போராட்டம் மாற்றப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது அங்கு,


"ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்! அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே! நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன? யாரை திருப்திப்படுத்த இந்தக் கைது?" போன்ற சுலோக அட்டைகளையும், நீளமான பதாதைகளையும் தாங்கியவாறு சமூக இடைவேளிகளை பேணி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


எனினும் தடை உத்தரவை மீறி பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்தோரை இராணுவத்தினர் கலைத்தனர். இன்னும் சிலர் கட்டாய‌ அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.