ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்திற்கு வரக்கூடாது - அமைச்சர் வீரசேகர அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்திற்கு வரக்கூடாது - அமைச்சர் வீரசேகர அதிரடி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியூதீனை நாடாளுமன்றிற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டாம் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் சற்று முன்னர் அவர் இந்தக் கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் முன்வைத்துள்ளார்.

ரிசாட் பதியூதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்றில் வந்து உரையாற்றுவதற்கு அனுமதிப்பது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள் மறைந்து கொண்டு வெளியிடும் கருத்துக்கள் எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பில் கைதாக உள்ளவர்கள் தப்பிச் செல்லக்கூடிய சூழ்நிiயை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தேசியப் பாதுகாப்பு தொடர்பிலான ஓர் விடயம் என்பதனால் ரிசாட்டை நாடாளுமன்றம் வர அனுமதிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றிற்கு வருவதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.