இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 70 தாதியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர்கள், ராகம மருத்துவமனையில் 08 தாதியர்கள், கராபிட்டி மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் தலா 04 தாதியர்கள் இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதிகரித்து வரும் கொரோனா நெருக்கடிக்கு மத்திய தாதியர்கள் குறைவளவான ஓய்வு நேரங்களை எடுத்துக்கொண்டு அதிகளவான நேரங்களில் பணிபுரியும் நிலைமை காணப்படுவதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.