இரு வாரங்களாக அமுலில் இருக்கும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, கொரோனா வைரஸின் பரவல் கணிசமாகக் குறைவடையலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்,
இந்த காலகட்டத்தில் மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பின்பு பெறப்படும் தரவுகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தவுடன் எமக்கு முன்னோக்கிச் செல்ல முடியும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
இந்த காலகட்டத்தில் மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பின்பு பெறப்படும் தரவுகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தவுடன் எமக்கு முன்னோக்கிச் செல்ல முடியும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)