பயணக்கட்டுப்பாடு மற்றும் கொரோனா பரவல் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்மா குணரத்ன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணக்கட்டுப்பாடு மற்றும் கொரோனா பரவல் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்மா குணரத்ன!

இரு வாரங்களாக அமுலில் இருக்கும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, கொரோனா வைரஸின் பரவல் கணிசமாகக் குறைவடையலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார், 

இந்த காலகட்டத்தில் மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பின்பு பெறப்படும் தரவுகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தவுடன் எமக்கு முன்னோக்கிச் செல்ல முடியும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.