இன்று (12) இரவு 11.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.
இந்த நேரத்தில் நீங்கள் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள். அதாவது ஒரு ஊரடங்கு போல இருக்கும்.
மேலும் இந்த கட்டுப்பாடு நாளை (13) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும்.
மீண்டும் நாளை (13) இரவு 11.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதுடன், 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள். அதாவது ஒரு ஊரடங்கு போல இருக்கும்.
அதன்பிறகு, மே 31ஆம் திகதிவரை ஒவ்வொரு நாளும் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.
பயணத்தடை செய்யப்பட்ட காலப்பகுதியில், அத்தியாவசிய சேவைகள் மாற்றம் உணவு விநியோகம் என்பவற்றுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டள்ளது. (யாழ் நியூஸ்)