ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஷ இன்று (12) அதிகாலை அவசரமாக அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.
வைத்திய சிகிச்சைக்காகவே பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாகவும், அவர் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் பசில் ராஜபக்ஷ பயணமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அவரின் இந்த திடீர் பயணம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் கடைசி நொடி வரை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.