மினுவங்கொடை பிரதேச சபை சாரதி ஒருவர் மற்றும் சுகாதாரப் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மினுவங்கொடை பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மினுவங்கொடை பிரதேச சபை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை ஊழியர் பொது சுகாதாரத் அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் இடத்தில் தொற்று நீக்கிம் பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில், அவ்வாறான ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.