பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், நாட்டில் உள்ள சகல பள்ளிவாயல்களிலும் கொரொனாவிலிருந்து நிவாரணம் வேண்டி எதிர்வரும் 08.05.2021 சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு விஷேட துஆப் பிரார்த்தனை ஒழுங்கு செய்யபட வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பள்ளிவாயல் இமாம், முஅத்தின் உட்பட பள்ளிவாயல் ஊழியர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டப்படுகின்றனர்.
மேலும் கொரொனா சுகாதார வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
-முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்