தனியார் வாகனங்களில் பயணிப்பவர்கள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக பயணம் செய்யும் போது வாகனத்திற்குள் ஃபேஸ் மாஸ்க் ( முகக்கவசம்) அணிவது அவசியமில்லை என பணியகத்தின் இயக்குனர் டாக்டர் பி. டி. கொக்கலகே தெரிவித்தார்.
வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அல்லது இனம் தெரியாத இருவர் தனியார் வாகனங்களில் பயணிக்கும் போது மாத்திரமே பயணிகள் வாகனத்திற்குள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் போது வாகனத்தினுள்ளே முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஒரு செய்திப்பத்திரிகை செய்தி வெளியிட்டதை தொடர்ந்தே டாக்டர் கொக்கலகே இந்த விளக்கத்தை வெளியிட்டார்.
சாரதியுடன் மேலும் இரு பயணிகள் மட்டுமே வாகனத்தில் பயணிக்க சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக பயணம் செய்யும் போது வாகனத்திற்குள் ஃபேஸ் மாஸ்க் ( முகக்கவசம்) அணிவது அவசியமில்லை என பணியகத்தின் இயக்குனர் டாக்டர் பி. டி. கொக்கலகே தெரிவித்தார்.
வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அல்லது இனம் தெரியாத இருவர் தனியார் வாகனங்களில் பயணிக்கும் போது மாத்திரமே பயணிகள் வாகனத்திற்குள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் போது வாகனத்தினுள்ளே முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஒரு செய்திப்பத்திரிகை செய்தி வெளியிட்டதை தொடர்ந்தே டாக்டர் கொக்கலகே இந்த விளக்கத்தை வெளியிட்டார்.
சாரதியுடன் மேலும் இரு பயணிகள் மட்டுமே வாகனத்தில் பயணிக்க சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
We wish to inform that, the director @HPBSriLanka has been misquoted saying, 'it is mandatory for people of the same household to wear masks inside a vehicle'. The news item will be corrected by the respective media institute. @WHOSriLanka @Dailymirror_SL @NalakaG @AzzamAmeen
— Health Promotion Bureau - Sri Lanka (@HPBSriLanka) May 12, 2021