நாட்டில் இன்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவே நாளொன்றில் நாட்டில் பதிவான அதிகபட்ச கொரோனா மரண எண்ணிக்கையாக கருதப்படுகிறது.