அம்பாறையில் இன்று (08) இடம்பெற்ற வீதி விபத்தில் அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு அதிகாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் கெப் ரக வாகனம் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த போது கெப் வாகனச் சாரதி மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலத்த காயமுற்ற அம்பாறை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துக்குக் காரணமாக கெப் வாகனச் சாரதி ஓர் அரச அலுவலர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.