இன்று ஆய்வகங்களில் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளில் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளது, தற்போது அறிக்கையிடப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் உண்மையான எண்ணிக்கை அல்ல என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
தற்போது நான்கு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளிலிருந்து நோயாளிகள் பதிவாகி வருவதாகவும், இது நாட்டில் உள்ள உண்மையான நோயாளிகளின் எண்ணிக்கையிலான தற்போதைய நிலவரம் அல்ல என்றும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாட்டின் உண்மையான நிலைமையினை விரைவாக பெறுவதற்கு, விரைவில் சோதனை முடிவுகளை வழங்க ஒரு பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தினசரி சோதனைகளில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுவது மிகவும் ஆபத்தானது என்று அவர் தெரிவித்தார்.
அத்தியவசிய வேலை நிமித்தம் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் மக்களுக்கு கோரிக்கை விடுத்தார், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கம் மட்டுமல்ல, மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
இல்லையெனில் நாடு தற்போதுள்ள வரம்புகளை மீறும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
தற்போது நான்கு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளிலிருந்து நோயாளிகள் பதிவாகி வருவதாகவும், இது நாட்டில் உள்ள உண்மையான நோயாளிகளின் எண்ணிக்கையிலான தற்போதைய நிலவரம் அல்ல என்றும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாட்டின் உண்மையான நிலைமையினை விரைவாக பெறுவதற்கு, விரைவில் சோதனை முடிவுகளை வழங்க ஒரு பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தினசரி சோதனைகளில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுவது மிகவும் ஆபத்தானது என்று அவர் தெரிவித்தார்.
அத்தியவசிய வேலை நிமித்தம் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் மக்களுக்கு கோரிக்கை விடுத்தார், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கம் மட்டுமல்ல, மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
இல்லையெனில் நாடு தற்போதுள்ள வரம்புகளை மீறும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.