நேற்றைய தினம் (13) இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், இலங்கையில் மேலும் 2,269 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும், ஏனைய அனைவரும் புதுவருட கொரொனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில், இலங்கையில் இதுவரையில் 135,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,145 பேர் நேற்று (13) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 108,802 ஆக அதிகரித்துள்ளது.