ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியின் உறுப்பினர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியின் உறுப்பினர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு!


ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி எஸ்.எம் ரஹீம், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துள்ளார்.


இவர் கடந்த 20ஆவது திருத்தத்திற்கான வாக்கெடுப்பிலும் ஆதரவாகவே வாக்களித்திருந்தார்.


இதேவேளை போர்ட் சிட்டி ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


வாக்கெடுப்பில் ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.