எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் (22) கொரோனா அறிகுறிகளுடன் எதிர்க்கட்சி தலைவரின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, கொரோனா தொற்றுக்கு இலக்கானது உறுதி செய்யப்பட்டது.
சுகாதார வழிமுறைக்கமைவாக எதிர்க்கட்சித் தலைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதும், அவரும் தொற்றுக்கு இலக்கானது தெரிய வந்தது.
அவரது மனைவிக்கு மாத்திரமே அறிகுறிகள் இருந்ததாகவும், சஜித் பிரேமதாசவுக்கு எந்தவித அறிகுறிகளும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
“கைகளை சரிவர கழுவுவோம் - பாதுகாப்பாக இருப்போம்”