நாட்டில் கொரோனா தொற்றின் வேகம், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிகரித்து செல்லும் நிலையில், சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிட்டுள்ளது.
- கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும்.
- இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
- பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும்.
- வெசாக், ரமழான் பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.
- ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.
- அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத்தரவேண்டும்.
- தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.
- பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்லவேண்டும்.
- மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல் போசன விருந்துபசாரம், மே 21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.
- அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.
- மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது.
- சிறைக் கைதிகளை பார்வையிட முடியாது.
- நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்க வேண்டும். மக்கள் வருகைதரமுடியும்.
- இசைக்கச்சேரி, கரையோர ஒன்றுகூடல்கள், உற்சவங்களுக்கு முழுமையாக தடை.
- மே 04 முதல் மே 20 வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை.
- மே 20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்கொண்டு அது திருத்தப்படும்.