நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மழை பெய்யும் போது தற்காலிமாக கடுமையான காற்றும் வீசும். அதேநேரம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை, கண்டி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை, காலி, மொனராகலை, கேகாலை, பொலன்னறுவை ஆகிய 17 மாவட்டங்களில் கடும் இடிமின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.
இதனால் மக்கள் திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும், இடிமின்னல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.