எதிர்காலத்தில் அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என அனைத்து இலங்கை விவசாய சம்மேளனத்தின் செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் வழங்கப்படாததாலும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்ட காரணத்தினாலே இவ்வாறு விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா பரவல் காரணமாக, சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் முடிவு நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியைக் குறைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50,000 டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய அனைத்து நெல் பங்குகளையும் தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக எதிர்காலத்தில் நெல் வர்த்தக தனியார் துறையால் ஆட்சி செய்யப்படலாம் என்றும், மேலும் இவ்வாறான செயல்பாடுகள் காரணமாக அரிசி விலையை கட்டுப்படுத்துவது அரசாங்கத்திற்கு கடினமாக இருக்கும் எனவும், இதனூடாக எதிர்காலத்தில் சந்தையில் அரிசி விலை இரட்டிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் வழங்கப்படாததாலும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்ட காரணத்தினாலே இவ்வாறு விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா பரவல் காரணமாக, சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் முடிவு நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியைக் குறைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50,000 டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய அனைத்து நெல் பங்குகளையும் தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக எதிர்காலத்தில் நெல் வர்த்தக தனியார் துறையால் ஆட்சி செய்யப்படலாம் என்றும், மேலும் இவ்வாறான செயல்பாடுகள் காரணமாக அரிசி விலையை கட்டுப்படுத்துவது அரசாங்கத்திற்கு கடினமாக இருக்கும் எனவும், இதனூடாக எதிர்காலத்தில் சந்தையில் அரிசி விலை இரட்டிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)