நாட்டில் 55 வயதிற்கு மேற்பட்டோருக்கான எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் 55 வயதிற்கு மேற்பட்டோருக்கான எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களை அவதானமாக இருக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 36 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிக மரணங்களும், கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

55 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுவாசப் பிரச்சினை போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி வைத்தியசாலையில் செல்லுமாறு இராணுவ தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

வைத்தியசாலை செல்லாத பட்சத்தில் வைத்தியரின் ஆலோசனைகளை தாமதமின்றி பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.