
இலங்கையில் சுமார் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அதிகாரங்கள் உடைய சட்டத்திருத்தங்களைக் கொண்ட அமைச்சரவை பத்திரமொன்றை நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் நடந்த அமைச்சரவை சந்திப்பில் முன்வைத்திருக்கின்றார்.
தேசிய பாதுகாப்பை காரணங்காட்டி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.
மேற்படி 20 இலட்சம் முகநூல் கணக்குகள் உண்மையான உரிமையாளர் அற்றவையாகவே செயற்பட்டு வருவதாக விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.