நாட்டில் நேற்று 18 கொரோனா மரணங்கள் - நேற்றைய நிலவரம் தொடர்பான விபரம் தமிழில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நேற்று 18 கொரோனா மரணங்கள் - நேற்றைய நிலவரம் தொடர்பான விபரம் தமிழில்!

இலங்கையில் நேற்று (12) மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவாகின. 

அதனடிப்படையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா, வந்துரம்ப, இமதுவ, வலஸ்முல்ல, மத்துகம, மெல்சிறிபுர, குருநாகல், அலவ்வ (2), மொரொன்துடுவ, ஓமல்பே, எம்பிலிபிட்டி, ஹல்தடுவத்த, கந்தெகெதர, பசறை, கொழும்பு – 05, தல்கஸ்வல மற்றும் பேருவல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று 2,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132,527 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 24,020 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று 957 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள். நாட்டில் இதுவைரை மொத்தமாக 107,657 பேர் குணமடைந்துள்ளார்கள்.

அத்துடன் 1519 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.