கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று (19) அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இன்று மாத்திரம் 09 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருக்கின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இவ்வாறு உயிரிழந்த அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களுக்கமைய, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 03 பேர், தலாத்து ஓயாவைச் சேர்ந்த 03 பேர், கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 02 பேர், கேகாலையைச் சேர்ந்த ஒருவர் என 09 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.