மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (24) அதிகாலை 1.30 மணி முதல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் சற்றுமுன் அவர் கைது செய்யப்பட்டதாக அவரது ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தலைவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனையும் அவரது வீட்டில் வைத்து சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர்.
UPDATE: ஈஸ்டர் தாக்குதலின் கொலையாளிகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இன்று (24) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக தற்போது அவர்களிடம் விசாரணை செய்து வருவதாக அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.
VIDEO LINK: https://fb.watch/533x1GKDa7/