கொழும்பில் கொரோனா தொற்று 18% வரை அதிகரிப்பு, சீரற்ற பரிசோதனைகளில் ஏராளமானோருக்கு கொரோனா உறுதி - இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கவும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் கொரோனா தொற்று 18% வரை அதிகரிப்பு, சீரற்ற பரிசோதனைகளில் ஏராளமானோருக்கு கொரோனா உறுதி - இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கவும்!

கொழும்பு மாநகர சபை பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது கடந்த வாரம் 4% முதல் 18% வரை 14% ஆக அதிகரித்துள்ளது, இதன் விளைவாக, கொழும்பு நகராட்சி மன்ற பகுதியிலுள்ள வீட்டு வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஆன்டிஜென் சோதனைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திரு. உபுல் ரோஹன தெரிவித்தார்.

அடுத்த வாரத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் பட்சத்தில் நாட்டை இரு வாரங்களுக்கு முடக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் வேகமாக அதிகரித்துள்ளதோடு, சீரற்ற பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வாரத்திற்குள், பல நகரங்கள் மற்றும் மக்கள் செறிவு கூடுதலான இடங்களில் ஆன்டிஜென் சோதனைகள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.