நுவரெலியா செல்வோருக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுவரெலியா செல்வோருக்கான விசேட அறிவித்தல்!

நுவரெலியாவுக்கு கடந்த சில நாட்களாக ஏராளமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட செல்கின்றனர். நுவரெலியா மாவட்டத்திலும் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நுவரெலியாவிற்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்குமாறு நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பின் குழுத் தலைவரும், நுவரெலியா மாவட்ட செயலாளருமான நந்தனம்கலபொட கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஏற்கனவே வார இறுதி நாட்களை நுவரெலியாவில் கழிக்க ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நுவரெலியா, வலபனே மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பின் குழுத் தலைவரும், நுவரெலியா மாவட்ட செயலாளருமான நந்தனம்கலபொட தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.