யால தேசிய பூங்காவில் யானை விரட்டிய சஃபாரி ஜீப்பின் சாரதிக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில், சாண்டோ என்ற யானையை ஜீப் மிக நெருக்கமான பின் தொடரும் காட்சிகள் இருந்தன.
இதனால் கோபமடைந்த யானை திடீரென திரும்பி, ஜீப்பை நோக்கி வேகமாக வந்தது. வாகனம் பின்பக்கமாக வேகமாக நகர்ந்து, யானையின் அபாயத்திலிருந்து தப்பித்தது.
அதிலிருந்த சுற்றுலா பயணிகள் மயிரிழையில் தப்பித்தனர். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்ச்சையானது.
இதை தொடர்ந்து, அந்த சஃபாரி வாகன சாரதியை அடையாளம் கண்ட பொலிசார், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவருக்கு 20,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.