VIDEO: யால தேசிய பூங்காவில் யானையால் விரட்டப்பட்ட சாரதிக்கு 20 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: யால தேசிய பூங்காவில் யானையால் விரட்டப்பட்ட சாரதிக்கு 20 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!


யால தேசிய பூங்காவில் யானை விரட்டிய சஃபாரி ஜீப்பின் சாரதிக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது.


சமூக ஊடகங்களில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில், சாண்டோ என்ற யானையை ஜீப் மிக நெருக்கமான பின் தொடரும் காட்சிகள் இருந்தன.


இதனால் கோபமடைந்த யானை திடீரென திரும்பி, ஜீப்பை நோக்கி வேகமாக வந்தது. வாகனம் பின்பக்கமாக வேகமாக நகர்ந்து, யானையின் அபாயத்திலிருந்து தப்பித்தது.


அதிலிருந்த சுற்றுலா பயணிகள் மயிரிழையில் தப்பித்தனர். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்ச்சையானது.


இதை தொடர்ந்து, அந்த சஃபாரி வாகன சாரதியை அடையாளம் கண்ட பொலிசார், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவருக்கு 20,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.