ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய LuLu குழுமத்தின் தலைவர் யூசப் அலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய LuLu குழுமத்தின் தலைவர் யூசப் அலி!


ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லூலூ குழுமத்தின் (LuLu Group) தலைவரான யூசுப் அலி, பயணித்த ஹெலிகாப்டர் கேரளா - கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது. 


ஹெலிகாப்டரில் இவருடன் 6 பேர் பயணித்தனர். அப்பகுதியில் கடும் காற்றுடன் மழையும் பெய்ததால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


விமானி சமாளித்து விமானத்தைச் செலுத்தியதால், சதுப்பு நிலப் பரப்பில் விமானம் தரையிறக்கப்பட்டது. யூசுப் அலி மற்றும் அவருடன் பயணித்த 06 பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர். மேலும் அவர்களுக்குச் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய பணக்காரர் யூசுப் அலி என்று ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு இந்திய 35 ஆயிரம் கோடியாகும். இவர் உலகம் முழுவதிலும் பல தொழில்களை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காலத்தில், கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு 1,400 படுக்கைகளைக் கொண்ட மருத்துவ மையத்தை உருவாக்கினார். மேலும் 68 லட்சம் இந்திய ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.