கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை , அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக உள்ளூர்மயமாக்கப்பட்ட வலுவான காற்று இருக்கலாம். இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.