ஐயாயிரம் ரூபா பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐயாயிரம் ரூபா பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை!


திடீரென ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்குவதற்கான அரசின் முடிவால் மிகவும் சிரமப்படுவதாக இலங்கை கிராம சேவகர் சங்கம் தெரிவித்துள்ளது. 


சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உட்பட 7 வகையான குடும்ப பிரிவிக்கு குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கும் திட்டம் நேற்று அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.


இன்று (11) கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கிராம சேவகர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிக்கற, இந்த ஐயாயிரம் ரூபா பகிர்ந்தளிக்கும் விவகாரத்தை பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.


புத்தாண்டுக்கு இன்னும் ஒரு நாள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், அவசர அவசரமாக கொடுப்பனவை வழங்குமாறு அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் உத்தரவிடுவது ஏமாற்றமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.