CCTV: சிறுமியை பயன்படுத்தி ஆடை விற்பனை நிலையத்தில் கொள்ளை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: சிறுமியை பயன்படுத்தி ஆடை விற்பனை நிலையத்தில் கொள்ளை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!


சிறுமியொருவரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பான காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.


நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.


சிறுமி ஒருவருடன் விற்பனை நிலையத்திற்குள் வரும் இளைஞர், அங்கு உடைகளை கொள்வனவு செய்ய சென்ற ஒருவருக்கு அருகில் சென்று அவரது பணப்பையை கொள்ளையிடும் காட்சி கமராவில் பதிவாகியுள்ளது.


கொள்ளையிட்ட பின்னர், உடைகளை கொள்வனவு செய்ய வந்தவர்கள் போல் அவர்கள் வெளியேறும் காட்சியும் பதிவாகியுள்ளது.


உடைகளை கொள்வனவு செய்த சென்றிருந்த பெண்ணொருவரின் பணப்பை காணாமல் போனதால், தமது பணப் பைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு விற்பனை நிலையத்தின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.


பண்டிகை காலத்தில் இப்படியான சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து வருவதால், கொள்ளையர்களிடம் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.