கத்தார், பாகிஸ்தான், குவைத் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து இஸ்லாமிய போதகர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அதில், இவ்வாறான மத போதகர்களை நாட்டுக்குள் அழைத்து வந்த 32 இஸ்லாமிய அமைப்புகள் குறித்து அரசாங்க உளவுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது
2005 முதல் 2019 வரை 1,800 இஸ்லாமிய போதகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அரசாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், உளவுத்துறை வட்டாரங்களின்படி, சந்தேக நபர்கள் இஸ்லாமிய மார்க்க போதனைகளை வழங்குவதற்காக பேருவளை, அக்கரைப்பற்று, காத்தான்குடி, மாதம்பே மற்றும் மூதூர் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்ததாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)