துறைமுக நகரத்தினை சீனாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது! எதிர்கால பேரழிவினை அடுத்த வாரம் முதல் பகிரங்கப்படுத்துவோம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துறைமுக நகரத்தினை சீனாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது! எதிர்கால பேரழிவினை அடுத்த வாரம் முதல் பகிரங்கப்படுத்துவோம்!


பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தினால் இலங்கைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் ஆகியவற்றை நாட்டு மக்களுக்கு எதிர்வரும் வாரம் முதல் பகிரங்கப்படுத்துவோம். நாட்டை பாதுகாக்க நாட்டு மக்கள் ஒன்றினைய வேண்டும் . 


மியன்மார் நாட்டு நிலைமையினை அரசாங்கம்  தோற்றுவிக்க கூடாது என தேசிய புத்திஜீவிகள் சங்கத்தின் தலைவர் நிஹால் நாணயக்கார தெரிவித்தார்.


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு  சட்ட மூலம் தொடர்பில் வினவிய  போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவின் காலணித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு நாட்டு  மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது. அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏதும் வரப்ரசாதங்கள் கிடைத்தால் அமைதி காத்து அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படுவார்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்திலும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது.


ஆட்சியிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் நாட்டின் தேசிய  வளங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிற நாட்டவர்களுக்கு தாரைவார்த்துள்ளார்கள். தற்போதைய அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை காட்டிலும் எல்லையற்ற வகையில் செயற்பட்டுள்ளது. நாட்டுக்குள் பிறிதொரு நாட்டை உருவாக்கி அதற்கான உரிமையின சட்ட மூலத்தின் ஊடாக வழங்க   இரகசியமான முறையில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பேரழிவினை நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் முதல் பகிரங்கப்படுத்துவோம். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


மக்களின் போராட்டத்தை கொரோனா வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி அரசாங்கம் முடக்கும். மியன்மார் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க இராணுவ ஆட்சிக்கு எதிராக  போராடுகிறார்கள். இவ்வாறான நிலைக்கு நாட்டை கொண்டு செல்லாத அளவிற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் எதிர்ப்புடன் அரசாங்கத்தை அடிபணிய வைக்க முடியும் என்றார்.


-இராஜதுரை ஹஷான்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.