கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்றிரவு (15) மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் மருமகனை மாமனார் மருமகனை தடியொன்றினால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் வசித்த 35 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 1990 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அறிவித்த நிலையில், தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபரான மாமா தனது முச்சக்கர வண்டியில் காயமடைந்த வரை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்போது அம்பியூலன்ஸ் வண்டி இடையில் வந்துள்ளது. அதில் வந்தவர்கள் காயமடைந்தவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்துள்ளளளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் தாக்குதலை நடத்தியவர் சடலத்தை கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய சந்தேக நபர் கொத்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதைனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
-க.கிஷாந்தன்