ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை தாம் ஏற்காதிருந்தமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கடந்த வார இறுதியில் வெளிவந்த பத்திரிகை ஒன்றுக்கு கூறியிருக்கிறார்.
அதேபோல இந்த அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட நாளில் இராஜாங்க அமைச்சுக்கு விஜேதாஸ நியமிக்கப்பட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்திருந்தார்.
மேலும், துறைமுக நகரம் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக அவர் விமர்சித்து வருகின்றார்.
இப்படியான நிலையியிலே அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.