நாட்டு மக்களுக்கு வழங்கும் சலுகையை மேலும் நீடிக்க எதிர்ப்பார்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்களுக்கு வழங்கும் சலுகையை மேலும் நீடிக்க எதிர்ப்பார்ப்பு!


27 பொருட்களுக்கு சதொச நிறுவனம் வழங்கி வரும் சலுகையை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக சதொச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருவதால் நுகர்வோரை ஏனைய வியாபாரிகளால் ஏமாற்றுவதற்கு ஏமாற்ற முடியவில்லை.

சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதொச நிறுவனம் செயற்படுகின்றது. அத்துடன் சலுகைப் பொதிக்கு பாரிய கிராக்கி நிலவுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டமை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமையும் என பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.