கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 19 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.