இரு சிறுவர்கள் துஷ்பிரயோகம்; திருகோணமலை பௌத்த பிக்கு கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு சிறுவர்கள் துஷ்பிரயோகம்; திருகோணமலை பௌத்த பிக்கு கைது!


திருகோணமலை கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று (7) உத்தரவிட்டார்.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் தம்பலகாமம்  பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விஹாராதிபதி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


கந்தளாய்  பகுதியில் உள்ள  விஹாரை ஒன்றுக்குச் சென்ற 12 மற்றும் 14 வயதான இரு சிறுவர்கள், சந்தேக நபர் தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமது பெற்றோர்களுடன் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமையகைது செய்ததாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேக நபரான பௌத்த பிக்குவை இன்று தம்பலாகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.