முல்லைத்தீவு வட்டுவாகலில் 2 கிலோ 500 கிராம் நிறையுடைய திமிங்கலத்தின் ஆம்பலுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர் என்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு அதிரப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அனுராதபுரம், புத்தளம் பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டு அவர்கள் பயணித்த வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.