இளம் வயது மனைவியை கொலை செய்து சடலத்தை கட்டிலின் கீழ் மறைத்து வைத்த கணவர்! புத்தளத்தில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இளம் வயது மனைவியை கொலை செய்து சடலத்தை கட்டிலின் கீழ் மறைத்து வைத்த கணவர்! புத்தளத்தில் சம்பவம்!


புத்தளம் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு மனைவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (10) பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


அதற்கமைய வெட்டாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் நேற்று இரவு ஏற்பட்ட முரண்பாட்டில் கோபமடைந்த கணவன் அவரது மனைவியை தடியினை கொண்டு தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் அவரது மனைவியின் சடலத்தை உரைப்பையால் மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துள்ளதுடன், அன்றைய தினம் இரவு சடலத்தை வேறு பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று மறைத்து வைக்கவும் திட்டமிட்டிருந்துள்ளார்.


எனினும் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதையடுத்து கட்டிலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


35 வயதுடைய குறித்த சந்தேக நபரை கைது செய்து புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளின் பின்னர் மரண பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.