ஈஸ்டர் தாக்குதலுக்கு எந்த நாடும் நிதி உதவி வழங்கவில்லை! இப்ராஹிம் என்பவரே நிதி வழங்கினார்! -சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலுக்கு எந்த நாடும் நிதி உதவி வழங்கவில்லை! இப்ராஹிம் என்பவரே நிதி வழங்கினார்! -சரத் வீரசேகர


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலிற்கு இப்ராஹிம் என்பவரே நிதி உதவி வழங்கினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


இப்ராஹிம் என்ற நபர் தற்போது குடும்பத்தினருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலிற்காக அந்த நபர் 50 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஸஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது சகாக்களிடம் 30 மில்லியன் மீட்கப்பட்டது என தெரிவித்துள்ள அமைச்சர் அந்த பணத்தை பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் ஆனால் இஸ்லாமிய அரசினை உருவாக்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எந்த நாடும் இந்த நிதியை வழங்கவில்லை என தெரிவித்துள்ள அவர் இப்ராஹிமின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள்; மகளும் தன்னை தெமட்டகொடையில் வெடிக்க வைத்துக்கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.