மத்திய மாகாணத்தில் நிறுவப்பட்ட அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களும் இப்போது அவற்றின் அதிகபட்ச திறனை எட்டியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகளின் இயக்குநர் டாக்டர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.
எனவே, பல புதிய சிகிச்சை மையங்களை நிறுவ வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை காரணமாக, மத்திய மாகாணத்தில் இனங்காணப்படும் கொரோனா நோயாளிகளை மற்றஒய மாகாண சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.