ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீது வெலிக்கடை பொலிஸில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரின் பெர்னாண்டோ எம்.பி.க்கு எதிராக அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆரச்சி என்பவரே புகார் அளித்திருந்தார்.
பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் எம்.பி ஹரின் பெர்னாண்டோ தன்னை வாய்மொழி துஷ்பிரயோகம் செய்து பின்னர் தாக்கியதாக எம்.பி. திஸ்ஸ குட்டி ஆரச்சி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆரச்சி அண்மையில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.