முரளிதரன் குறித்து சென்னை அப்பொலோ மருத்துவமனையின் அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முரளிதரன் குறித்து சென்னை அப்பொலோ மருத்துவமனையின் அறிக்கை!

இலங்கையின் முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை (18) ஆஞ்சியோபிளாஸ்டிக்கு உட்படுத்தப்பட்டதோடு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முரளிதரன் தனது இயல்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என்று மருத்துவமனை செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.

இருதய மதிப்பீட்டிற்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் முரளிதரன் ஆஞ்சியோபிளாஸ்டி நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக மருத்துவமனை மேலும் தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு கொழும்பில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டன.

இந்தியாவில் பரிசோதனைகள் செய்வதற்கு முன்பும் அவர் மருந்துகள் பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

49 வயதான முரளிதரன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.எச்) அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பதோடு, சென்னையில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்றும் வருகின்றார்.

சன்ரைசர் அணியுடன் இணைவதற்கு முரளிதரன், ஆறு நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.