இலங்கைக்குள் நுழைந்த சீன அணுவாயுத கப்பல்! வெளியேறும்படி உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்குள் நுழைந்த சீன அணுவாயுத கப்பல்! வெளியேறும்படி உத்தரவு!


ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கு யுரேனியம் எனும் அணு ஆயுத திரவியங்களைக் கொண்ட வெளிநாட்டுக் கப்பலொன்று வந்துள்ளமை பற்றிய தகவல் குறித்து உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.


அணுவாயுத அதிகார சபையின் அனுமதியின்னறி நேற்றைய தினத்தில் இவ்வாறான கப்பல் வருகை தந்திருப்பதாகவும், குறைந்த பட்சம் அந்தக் கப்பல் பரிசோதனைக்குக்கூட உட்படுத்தப்படவில்லை என்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.


அதற்கமைய உடனடியாக விசாரணை நடத்தி தகவல்களை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.


இதேவேளை, குறித்த சீனக் கப்பலை உடனடியாக வெளியேறும்படி இலங்கை அறிவித்துள்ளது.


இலங்கை அணு ஆயுத மற்றும் மின்சக்தி நிர்வாக ஆணைக்குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.