மீண்டும் லோக்டவுன் அபாயத்தில் கொழும்பு மாவட்டம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் லோக்டவுன் அபாயத்தில் கொழும்பு மாவட்டம்?


கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் மீண்டும் தனிமைப்படுத்தும் அபாயத்தில் கொழும்பு மாவட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறிப்பாக கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் 08 வீதத்தில் அதிகரித்துள்ளது.


நாட்டில் நேற்று 367 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு அவர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.


இவ்வாறு தொடர்ச்சியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அபாயகரமான பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்தவே நேரிடும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.