அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியாவில் இன்று (28) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களின்படி, முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டம் நடைபெற்றது.
ரிஷாத் பதியுதீனின் கைது ஜனநாயகமற்றது என்றும் அரசியல் பழிவாங்கள் என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிறுவப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பல்வேறு கட்சிகளின் அரசியல் நலன்களுக்காக பணியாற்றியமைக்கே கைது செய்யப்பட்டார் என்றும் மக்களுக்கு சேவை செய்ய உறுதியளித்த அத்தகைய ஜனரஞ்சக தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான செயல்பாடுகள் ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் பொருத்தமற்றது எனவும் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்த நேர்ந்தது.
கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களின்படி, முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டம் நடைபெற்றது.
ரிஷாத் பதியுதீனின் கைது ஜனநாயகமற்றது என்றும் அரசியல் பழிவாங்கள் என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிறுவப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பல்வேறு கட்சிகளின் அரசியல் நலன்களுக்காக பணியாற்றியமைக்கே கைது செய்யப்பட்டார் என்றும் மக்களுக்கு சேவை செய்ய உறுதியளித்த அத்தகைய ஜனரஞ்சக தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான செயல்பாடுகள் ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் பொருத்தமற்றது எனவும் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்த நேர்ந்தது.