PHOTOS: ரிஷாத் பதியுத்தீனை விடுதலை செய்யக்கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: ரிஷாத் பதியுத்தீனை விடுதலை செய்யக்கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியாவில் இன்று (28) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களின்படி, முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டம் நடைபெற்றது.

ரிஷாத் பதியுதீனின் கைது ஜனநாயகமற்றது என்றும் அரசியல் பழிவாங்கள் என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிறுவப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பல்வேறு கட்சிகளின் அரசியல் நலன்களுக்காக பணியாற்றியமைக்கே கைது செய்யப்பட்டார் என்றும் மக்களுக்கு சேவை செய்ய உறுதியளித்த அத்தகைய ஜனரஞ்சக தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான செயல்பாடுகள் ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் பொருத்தமற்றது எனவும் தெரிவித்தனர். 

போராட்டத்தின் போது பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்த நேர்ந்தது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.