வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு மீண்டும் வருவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை பெறத் தேவையில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு மீண்டும் வருவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை பெறத் தேவையில்லை!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு மீண்டும் வருவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை பெறத் தேவையில்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தநிலையில் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்தது.

இவ்வாறு திரும்பிவர தயாராக உள்ளவர்கள் மற்றும் சொந்த செலவில் திரும்பத் தயாராக உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற அறிவுறுத்தப்பட்டனர்.

எனினும், வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு இதுபோன்ற அனுமதி தேவையில்லை என்று கொவிட் செயலணி அறிவித்துள்ளது.

இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.