
இதன்படி மூன்று கிலோ அரிசியில் ஒரு குடும்பம் இரண்டு வாரங்கள் உணவு சமைத்து உட்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ள கருத்தே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 2500 ரூபாவில் ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு உணவு உட்கொண்டு வாழலாம் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பியவர் பந்துல குணவர்தன.
இந்தநிலையில், அரசாங்கம் 1000 ரூபாவிற்கு நிவாரண பொதி வழங்குவதாகவும் ஆனால் அந்த நிவாரண பொதியை குறைந்த விலையில் வேறு இடங்களில் சிலர் விற்பனை செய்வதாகவும் ஆனால் அரசாங்கத்தின் நிவாரண பொதியில் உள்ள பொருட்கள் மிகவும் தரமானவை எனவும் பந்துல தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.