சுகாதார பாதுகாப்பு வழிகாட்டிகளுக்கு அமைவாக செயற்படுங்கள்! அனர்த்த நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டிகளுக்கு அமைவாக செயற்படுங்கள்! அனர்த்த நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்!


எதிர்வரும் வார இறுதியில் நீண்ட விடுமுறை இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக அனர்த்த நிலையை புரிந்துகொண்டு தேசிய பொறுப்பாக கருதி செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.


எதிர்வரும் தினங்களில் மத வைபவங்கள் இடம்பெறவுள்ளன. புத்தாண்டு வைபவங்களையும் நடத்துவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர்.


இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் இந்த அனைத்தையும் நிறுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.


தற்பொழுது நாட்டில் காணப்படும் கொரோனா  வைரஸ் புதிய திரிபு ஆகும். இது முன்னைய வைரசிலும் பார்க்க மாற்றத்தைக் கொண்டதாகும்.


சுனாமியைப்போன்று வேகமாக தற்பொழுது இந்தியா போன்ற நாடுகளில் பரவி வருகின்றது. இது எந்த வகை வைரசு தொற்று என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த வைரசு தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கு 14 நாட்களுக்கு பிறகே நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன.


1 ஆவது, 2 ஆவது வைரசு தொற்று அலையின் போது நாட்டு மக்கள் அதனை பொறுப்புடன் செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.


அதேபோன்று, தற்போது நெருக்கடியான தொற்றுக்கு மத்தியில் பொதுமக்கள் தமது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.