மேலுமொரு புத்தர் சிலை உடைப்பு!! நபரொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலுமொரு புத்தர் சிலை உடைப்பு!! நபரொருவர் கைது!


இறக்குவானை நகரிலுள்ள புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.


இறக்குவானை பஸ் தரிப்பிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இன்று (23) அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள ஒருவரே இந்த புத்தர் சிலையை உடைத்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.


எவ்வாறாயினும், இறக்குவானை நகரிலுள்ள CCTV கமராக்களில் பதிவாகியுள்ள காணொளியின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


இந்த சம்பவத்தின் பின்னணியில், எந்தவித இனவாத செயற்பாடுகளும் கிடையாது என்பது, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.